சென்னை: மரம் வெட்டும் இயந்திரத்தில் இடதுகை மணிக்கட்டு வெட்டப்பட்ட இளைஞருக்கு 8 மணி நேரம் நடந்த கை மறுஇணைப்பு அறுவை சிகிச்சை மேற்கொண்டு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவர்கள் மறுவாழ்வு அளித்தனர்.
செங்கல்பட்டைச் சேர்ந்தவர் சரவணன்(26). சோழிங்கநல்லூரில் கடந்த 5-ம் தேதி இயந்திரம் மூலம் மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த போது, தவறுதலாக இயந்திரம் பட்டதில், அவரது இடதுகை மணிக்கட்டில் ஆழமாக வெட்டப்பட்டது. உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.