
சென்னை,
தமிழ்நாடு காவல்துறையில் 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
விவரம் பின்வருமாறு:-
* சென்னை காவல் துறை தலைமையக ஐ.ஜி. விஜயேந்திர பிதாரி சென்னை கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
* ஐபிஎஸ் அதிகாரி கபில் குமார் ஷரத்கர் சென்னை அமலாக்கப் பிரிவு ஐ.ஜி.யாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
* சென்னை அமலாக்கப் பிரிவு ஐ.ஜி. ஜி.கார்த்திகேயன், சென்னை போக்குவரத்துத்துறை ஐ.ஜி.யாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
* லஞ்சம் மற்றும் ஊழல் கண்காணிப்புத் துறை இணை ஆணையர் சந்தோஷ் குமார், சென்னை பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி.யாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
* சென்னை பொருளாதார குற்றப் பிரிவு ஐ.ஜி. சத்யப்ரியா காவலர் நலன்பிரிவு ஐ.ஜி.யாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
* காவலர் நலன்பிரிவு டி.ஐ.ஜி. எம்.துரை காவல் துறை தலைமையக டி.ஐ.ஜி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
* தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை டி.ஜி.பி.யாக சீமா அக்ரவால் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
* குடிமைப் பொருட்கள் மற்றும் உணவு வழங்கல்துறை ஐ.ஜி. ரூபேஷ் குமார் மீனா கூடுதல் பொறுப்பாக அத்துறையின் டி.ஜி.பி. பொறுப்புகளை கவனித்துக் கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.