595 பூங்காங்களை தனியார் பராமரிக்க மாநகராட்சி கூட்டத்தில் அனுமதி: செனாய் நகர் அம்மா அரங்கம் வாடகை உயர்கிறது

4 months ago 17

சென்னை: சென்னை மாநகராட்சி நிதி நிலையைக் கருத்தில் கொண்டும் சிறப்பாக பராமரிப்பதற்காகவும் சென்னையில் உள்ள 595 பூங்காக்கள், செனாய் நகர் அம்மா அரங்கம், தி.நகர் சர்.பிட்டி. தியாகராய அரங்கம், வியாசர்பாடி உள்பட 9 இடங்களில் உள்ள கால்பந்து செயற்கை புல் விளையாட்டுத் திடல்கள் ஆகியவற்றை தனியார் வசம் ஒப்படைக்க மாநகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 79 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முக்கிய தீர்மானங்கள் வருமாறு: சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் 871 பூங்காக்கள் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. மேலும், பல்வேறு அரசு திட்டங்களின் மூலமாக புதிய பூங்காக்கள் உருவாக்கப்படுகிறது.

Read Entire Article