ராசிபுரம், பிப்.4: ராசிபுரம் சுற்றுவட்டார பகுதியில் அதிகளவு பருத்தி பயிரிடப்படுகிறது. இப்பகுதியில் உள்ள விவசாயிகளிடம் பருத்தியை வாங்கி, ஏல முறையில் வியாபாரிகளுக்கு ஆர்.சி.எம்.எஸ்., என்கிற ராசிபுரம் கூட்டுறவு விற்பனை சங்கம் விற்பனை செய்து வருகிறது. ராசிபுரம் அடுத்த கவுண்டம்பாளையம் ஆர்.சி.எம்.எஸ்., கிடங்கில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. இதில் 588 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஆர்.சி.எச்., ரகம் குறைந்தபட்சமாக ₹7,289க்கும், அதிகபட்சமாக ₹8,260க்கும் விற்பனையானது. டி.சி.எச்., குறைந்தபட்சமாக ₹10,360க்கும், அதிகபட்சமாக ₹10,630க்கும், கொட்டு ரகம் அதிகபட்சமாக ₹4.899க்கும், குறைந்தபட்சமாக ₹3,300க்கும் ஏலம் போனது. ஆர்.சி.எச்., 532 மூட்டை, டி.சி.எச்., 4, கொட்டு 52 மூட்டை என மொத்தம் 588 மூட்டைகளும், ₹14லட்சத்திற்கு ஏலம் போனது.
The post 588 மூட்டை பருத்தி ₹14லட்சத்திற்கு ஏலம் appeared first on Dinakaran.