₹40 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை கே.வி.குப்பம் சந்தையில்

2 months ago 12

கே.வி.குப்பம், நவ.19: கே.வி.குப்பம் சந்தையில் ₹40 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானது. கே.வி.குப்பம் ஆட்டுச்சந்தை மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்தது. இங்குள்ள சந்தை மேடு பகுதியில் பிரிதி வாரம் திங்கள்கிழமை அன்று ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். கடந்த வாரங்களில் நடைபெற்ற சந்தையில் பல்வேறு ரக ஆடுகளை விற்பனைக்காக வியாபாரிகள் கொண்டுவந்தனர். எதிர்பார்த்த அளவிற்கு வியாபாரமும் நடந்து, நல்ல லாபம் கிடைத்ததாக விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து திங்கட்கிழமையான நேற்று காலை வழக்கம்போல சந்தை கூடியது. தொடக்கம் முதலே ஆடுகள் வரத்து அதிகமாக காணப்பட்டது. மேலும், காட்பாடி, குடியாத்தம், பரதராமி, ஒடுகத்தூர் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களில் இருந்தும், அண்டை மாநிலமான ஆந்திர மாநிலத்தில் இருந்தும் ஆடுகள் லோடு வாகனம் மூலம் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டது. ஆனால் ஆடுகள் விலை கடுமையாக உயர்ந்ததால், பெரும்பாலானோர் ஆடுகளை வாங்க ஆர்வம் காட்டவில்லை. இதனால் விற்பனை மந்தமாகி, சந்தையில் ₹40 லட்சம் வரை மட்டும் வியாபாரம் நடந்ததாக வியாபாரிகள் கூறினர்.

The post ₹40 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை கே.வி.குப்பம் சந்தையில் appeared first on Dinakaran.

Read Entire Article