4 நாட்களில் 6 லட்சம் பேர் அரசு பேருந்துகளில் பயணம்: அரசுப் போக்குவரத்துக் கழகம் தகவல்

2 hours ago 3

சென்னை: ஜூன் 4 முதல் ஜூன் 8 வரை இயக்கப்பட்ட 11,026 பேருந்துகளில் 6,06,430 பயணிகள் பயணித்துள்ளனர் என அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் ஆர். மோகன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையின் சார்பில், முகூர்த்தம், பக்ரீத் பண்டிகை மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. சனிக்கிழமை பக்ரீத் பண்டிகைக் கொண்டாடப்பட்டதால், வியாழக்கிழமை இரவு முதலே ஏராளமானோர் சென்னையிலிருந்து வெளியூர்களுக்குச் செல்ல தொடங்கியிருந்தனர்.

இந்நிலையில் ஜூன் 4 முதல் ஜூன் 8 வரை இயக்கப்பட்ட 11,026 பேருந்துகளில் 6,06,430 பயணிகள் பயணித்துள்ளனர் என அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் ஆர். மோகன் தெரிவித்துள்ளார். நேற்று நள்ளிரவு 24.00 மணி நிலவரப்படியும் மற்றும் இன்று அதிகாலை 02.00 மணி வரை சென்னையிலிருந்து வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையான 2,092 பேருந்துகளில் 2,092 பேருந்துகளும், 936 சிறப்புப் பேருந்துகளும் ஆக 3,028 பேருந்துகளில் 1,66,540 பயணிகள் பயணம் செய்துள்ளனர். ஜூன் 4 முதல் ஜூன் 8 வரை இயக்கப்பட்ட 11,026 அரசு பேருந்துகளில் 6,06,430 பயணிகள் பயணித்துள்ளனர்.

The post 4 நாட்களில் 6 லட்சம் பேர் அரசு பேருந்துகளில் பயணம்: அரசுப் போக்குவரத்துக் கழகம் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article