₹4.40 லட்சத்திற்கு வெற்றிலை விற்பனை

4 months ago 14

 

கடத்தூர், ஜன.6: கடத்தூர் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை வாரச்சந்தை நடைபெற்றது. இங்கு தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த ஏராளமான வியாபாரிகள் வெற்றிலை வாங்க வந்திருந்தனர். மணியம்பாடி, நல்லகுட்லஹள்ளி, கோம்பை, அஸ்தகிரியூர், முத்தனூர், கேத்திரெட்டிப்பட்டி, அய்யம்பட்டி, வேப்பிலைபட்டி, காவேரிபுரம் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், வெற்றிலையை விற்பனைக்கு கொண்டு வந்தனர். கடந்த வாரம், 128 கட்டுகளை கொண்ட ஒரு மூட்டை வெற்றிலை ₹10,000 முதல் அதிகபட்சமாக ₹22,000 வரை விற்பனையானது. நேற்று நடந்த சந்தையில், எந்த மாற்றமுமின்றி, அதே விலைக்கு வெற்றிலை விற்பனையானது. நேற்றைய சந்தையில், ₹4.40லட்சத்திற்கு வெற்றிலை விற்பனையானது.

The post ₹4.40 லட்சத்திற்கு வெற்றிலை விற்பனை appeared first on Dinakaran.

Read Entire Article