3வது ஒருநாள் போட்டி; இங்கிலாந்துக்கு 252 ரன்கள் இலக்கு நிர்ணயித்த வெஸ்ட் இண்டீஸ்

1 day ago 5

லண்டன்,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரில் முதல் இரு ஆட்டங்களில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 3வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.

மழை காரணமாக இந்த ஆட்டம் 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸின் தொடக்க வீரர்களாக பிரண்டன் கிங் மற்றும் எவின் லூயிஸ் களம் இறங்கினர்.

இதில் பிரண்டன் கிங் 16 ரன், எவின் லூயிஸ் 8 ரன் எடுத்து அவுட் ஆகினர். தொடர்ந்து களம் புகுந்த கீசி கார்டி 29 ரன், ஜஸ்டின் க்ரீவஸ் 12 ரன், ஷாய் ஹோப் மற்றும் ரோஸ்டன் சேஸ் ரன் எடுக்காமலும் அவுட் ஆகினர். இதையடுத்து ரூதர்போர்டு மற்றும் குடகேஷ் மோடி ஜோடி சேர்ந்தனர்.

இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இதன் காரணமாக இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதில் ரூதர்போர்டு 70 ரன்னிலும், அடுத்து வந்த அல்சாரி ஜோசப் 41 ரன்னிலும் அவுட் ஆகினர்.

இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 40 ஓவர்களில் 40 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 251 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக ரூதர்போர்டு 70 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் அடில் ரஷித் 3 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து 252 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து ஆட உள்ளது.

Read Entire Article