3 பேரை இரும்பு ராடால் தாக்கிய வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி கைது: தப்பித்து ஓடியதில் கீழே விழுந்து காலில் காயம்

2 weeks ago 4

திருவள்ளூர்: முன்விரோதம் காரணமாக 3வாலிபர்களை இரும்பு ராடால் தாக்கிய வழக்கில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார். துரத்திச் சென்றபோது தவறி விழுந்ததில் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். திருவள்ளூர் அடுத்த முருக்கஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (30). இவர் தனது நண்பர்களான சரத் (28), அருண் (20) ஆகியோருடன் சேர்ந்து கடந்த 18ம் தேதி இரவு காக்களூர் எடை மேடை அருகே மது அருந்தினார். அப்போது காக்களூர் ஏரிக்கரை பகுதியை சேர்ந்த அம்பேத்கர் என்பவர் சரத் என்பவரை செல்போனில் அழைத்துள்ளார்.

பின்னர் அம்பேக்கரை பார்ப்பதற்காக சரவணன், சரத், அருண் ஆகிய மூன்று பேரும் சென்றுள்ளனர். அப்போது, அங்கு காக்களூர் ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்த அம்பேத்கர் (29), சூர்யா (25), சந்தோஷ் (22), தினேஷ் (20) ஆகியோர் இவர்களை இரும்பு ராடால் தாக்கிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர். இந்த சம்பவம் குறித்து சரவணன் திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்தநிலையில் காக்களூர் பகுதியில் நேற்றுமுன்தினம் மாலை பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது அம்பேத்கர் என்பவரை தாலுகா போலீசார் விரட்டிச்சென்று சுற்றிவளைத்து கைது செய்தனர். தொடர்ந்து, இரவு திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளை அழைத்துச் செல்லும் தள்ளுவண்டியில் அம்பேத்கரை கொண்டு வந்தனர்.

அப்போது, அம்பேத்கரின் பெற்றோர் தனது மகனை போலீசார் தாக்கியதாக கூச்சலிட்டு கதறினர். இதுகுறித்து, போலீசாரிடம் விசாரித்ததில், பைக்கிலிருந்து சென்று கொண்டிருந்தவரை துரத்தினோம். அப்போது வளைவில் திரும்பும்போது தவறி விழுந்து காலில் காயம் ஏற்பட்டதாகவும், போலீசார் சார்பில் எந்த தாக்குதலும் நடத்தவில்லை எனவும் தெரிவித்தனர். இதனையடுத்து பலத்த பாதுகாப்புடன் புழல் மத்திய சிறைக்கு அம்பேத்கரை கொண்டு சென்றனர். இதனால் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post 3 பேரை இரும்பு ராடால் தாக்கிய வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி கைது: தப்பித்து ஓடியதில் கீழே விழுந்து காலில் காயம் appeared first on Dinakaran.

Read Entire Article