அரூர், பிப்.15: தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லூரில் வாரந்தோறும் வெள்ளி கிழமை அன்று சந்தை நடப்பது வழக்கம். இந்த சந்தையில் ஆடு, கோழி உள்ளிட்டவைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். நேற்று ஆடுகள் வாங்க ஊத்தங்கரை, திருப்பத்தூர், ஆம்பூர், காரிமங்கலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர். சுமார் 170க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. ஆடு ₹5,200 முதல் ₹9,500 வரை விற்பனையானது. ெமாத்தம் ₹28 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானது.
The post ₹28 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை appeared first on Dinakaran.