சென்னை: தமிழக அரசு பதிவுத்துறை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொங்கலையொட்டி வெள்ளிக்கிழமை அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்தும், அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 25ம் தேதி (சனிக்கிழமை) அன்று பணி நாளாக அறிவித்தும் உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, 17ம் தேதி வரை தொடர் விடுமுறை உள்ள நிலையில் அதன்பின் வரும் 18ம் தேதி சனிக்கிழமையில் செயல்படும் 100 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு அன்று ஒருநாள் மட்டும் செயல்படுவதிலிருந்து விலக்கு அளித்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தை மாதத்தின் முதல் வேலை நாளான 20ம் தேதி சுபமுகூர்த்தம் அன்று அதிகளவில் ஆவணப்பதிவு நடைபெறும் என்பதால் கூடுதலாக முன்பதிவு டோக்கன் ஒதுக்கீடு செய்ய பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன. இதனை ஏற்று, 20ம் தேதி ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும், 2 சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200க்கு பதிலாக 300 முன்பதிவு டோக்கன்களும் அதிகளவில் ஆவணப்பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 சாதாரன முன்பதிவு டோக்கன்களோடு ஏற்கனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு டோக்கன்களோடு கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு டோக்கன்களும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
The post 20ம் தேதி கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு 100 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு சனிக்கிழமை விடுமுறை அறிவிப்பு appeared first on Dinakaran.