'2047-ல் இந்தியா அனைத்து துறைகளிலும் முதலிடம் பெற இளைஞர்கள் உறுதியேற்க வேண்டும்' - அமித்ஷா

5 hours ago 1

காந்திநகர்,

குஜராத் மாநிலம் பஞ்ச்மகால் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ கோவிந்த் குரு பல்கலைக்கழகத்தில் ரூ.125 கோடி மதிப்பிலான மேம்பாட்டுப் பணிகளின் தொடக்க விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா காணொலி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது;-

"ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு எதிராக போராடிய கோவிந்த் குரு, இந்தியாவின் சுதந்திர இயக்க வரலாற்று வீரர்களில் ஒருவராவார். ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் சுமார் 1,512 பழங்குடி சகோதர, சகோதரிகள் உயிர் தியாகம் செய்தனர். மேலும் குஜராத்தில் உள்ள மங்காத், இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஒரு முக்கிய இடமாக மாறியது.

பிரதமர் நரேந்திர மோடி கோவிந்த் குருவின் வீரத்தை முன்னெடுத்துச் சென்றுள்ளார். மேலும் 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை ஒரு சிறந்த தேசமாக மாற்ற உறுதிபூண்டுள்ளார் . இது நம் அனைவருக்கும் முக்கியமான விஷயம். நாடு சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும்போது, உலகின் அனைத்துத் துறைகளிலும் இந்தியா முதலிடம் பெற வேண்டும் என்ற உறுதிமொழியை நமது இளைஞர்களும், குழந்தைகளும் எடுக்க வேண்டும்."

இவ்வாறு அமித்ஷா தெரிவித்தார். 

Read Entire Article