2026ல் திமுக குறித்து பேசியவர்களுக்கு சாவு மணி அடிக்கும் வெற்றி: ஈரோடு கிழக்கு தேர்தல் குறித்து அமைச்சர் சேகர்பாபு பேச்சு

4 weeks ago 7

பெரம்பூர்: 2026ல் திமுக குறித்து பேசியவர்களுக்கு சாவு மணி அடிக்கும் வெற்றி ஈரோடு வெற்றி என அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார். சென்னை கிழக்கு மாவட்ட திமுக கொளத்தூர் மேற்கு பகுதி சார்பில், ‘வஞ்சிக்கப்படுவது தமிழ்நாடு உரிமையை மீட்போம் துணிவோடு’ என்ற தலைப்பில் தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மோடி அரசுக்கு எதிராக கண்டன பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் மாலை பெரவள்ளூரில் நடந்தது. பகுதி செயலாளர் நாகராசன் தலைமை வகித்தார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலை வகித்தார். இதில் மனுஷ்யபுத்திரன், உடுமலை தண்டபாணி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசியதாவது:
ஒரு மாநிலத்தின் வரி பங்கில் ஒன்றியத்திலேயே அதிகம் 6 லட்சம் கோடிக்கும் அதிகமான பங்கினை வழங்கியது தமிழ்நாடு. ஆனால் ஒன்றிய அரசால் குறைவான நிதி வழங்கப்படும் மாநிலம் தமிழ்நாடுதான். உலகமே போற்றும் திட்டங்களை கொடுக்கும் முதல்வர் நம் முதல்வர். ஒன்றிய அரசு நிதி கொடுக்கவில்லை என்றாலும் தமிழ்நாடு முதல்வர் மதியால் திட்டங்களை செயல்படுத்துகிறார். 2026ல் திமுக குறித்து பேசியவர்களுக்கு சாவு மணி அடிக்கும் வெற்றி ஈரோடு தேர்தல் வெற்றி. 200ல் அல்ல 234லிலும் திமுக வெல்லும். மீண்டும் திமுக ஆட்சியை திமுக தலைவர் தலைமையில் அமைப்போம்.

நிகழ்ச்சியில் மனுஷ்யபுத்திரன் பேசியதாவது:
சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பற்ற நிலையை உருவாக்க சிலர் நினைக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் அது நடக்காது. டெல்லியில் பாஜ ஆட்சிக்கு வந்துள்ளது. ஆனால் இதற்காக கடந்த சில ஆண்டுகளாக என்னென்ன செய்தார்கள், கைது நடவடிக்கைகள், முக்கியத்தலைவர்களை நெருக்கடிக்கு ஆளாக்கி செயல்படவிடாமல் வெற்றி பெறுகிறார்கள் என்றால் இது வெற்றியல்ல. இதை தான் தமிழ்நாட்டில் செய்ய நினைக்கிறார்கள். பெரியாரை அழித்தால் திராவிடம் அழிந்து விடும் என நினைக்கிறார்கள், ஆனால் அடிக்க அடிக்க உயர்ந்து நிற்கிறார் பெரியார். பெரியாரை அடிக்க நினைத்தால் என்ன நடக்கும் என்பதற்கு ஈரோடு இடைத்தேர்தல் சாட்சி. சீமானுக்கு பின்னால் நிற்பவர்களுக்கும் 2026ல் இதே நிலைதான். கடவுள் நம்பிக்கை உள்ளவர்களையும் இல்லாதவர்கள் என எல்லோருக்குமான நலனை திமுகதான் காக்கும். இவ்வாறு அவர்கள் பேசினர்.

கூட்டத்தில் மேயர் பிரியா, வில்லிவாக்கம் சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றியழகன், ஜோசப் சாமுவேல், மண்டலக் குழு தலைவர் சரிதா மகேஷ்குமார், பகுதி செயலாளர் ஐ.சி.எப் முரளி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சந்துரு, மகேஷ் குமார் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மாவட்ட, பகுதி, வட்ட நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

The post 2026ல் திமுக குறித்து பேசியவர்களுக்கு சாவு மணி அடிக்கும் வெற்றி: ஈரோடு கிழக்கு தேர்தல் குறித்து அமைச்சர் சேகர்பாபு பேச்சு appeared first on Dinakaran.

Read Entire Article