2026 தேர்தலில் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி - எடப்பாடி பழனிசாமி பேச்சு

3 hours ago 1

சேலம்,

சேலம் ஆத்தூரில் அதிமுகபொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சியில், எடப்பாடி பழனிசாமிக்கு நிர்வாகிகள் வேல் வழங்கினர். அதனை தொடர்ந்து அவர் பேசியதாவது:-

அதிமுகவை பலர் முடிக்க பார்த்தார்கள். முடக்க பார்த்தார்கள், ஆனால் முடியவில்லை. அதிமுகவில் இருக்கும் அனைவருமே தலைவர்கள்தான். அதிமுக உங்கள் சொத்து. அதிமுக வலுப்பெற்று இருக்கிறது. திமுக தேய்கிறது.

அதிமுகவில் மட்டும்தான் சாதாரண தொண்டன் உச்சபட்ச அதிகாரத்திற்கு வர முடியும். தமிழ்நாட்டு பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகையை அதிமுகதான் போராடிப் பெற்றுத் தந்தது. ரூ.1,500 தருகிறோம் என அதிமுக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தோம். ஆனால், யாரோ சிலர் சொன்னார்கள் என்பதற்காக திமுகவுக்கு ஓட்டு போட்டீர்கள்.

சுதந்திரம் கிடைத்து பல ஆண்டு ஆனாலும், மன்னராட்சி, குடும்ப ஆட்சி வேண்டும் என நினைக்கின்றனர். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தலைவாசல் கால்நடை பூங்காவை திறக்க மனமில்லை. உதயநிதி, இன்பநிதி என எல்லாருக்கும் நிதி என பெயர். நிதிதான் முக்கியம் அவர்களுக்கு. 2026 தேர்தலில் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக இருக்கும். எம்.ஜி.ஆர்., அம்மா இருக்கும் போது கட்சி வளர எப்படி துணை நின்றீர்களோ, அதேபோல எப்போதும் துணை நிற்க வேண்டும் என்றார்.

Read Entire Article