சென்னை: கடந்த 2023-24-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் மின்வாரியம் சமர்ப்பித்துள்ளதால், தமிழக அரசு ரூ.7,050 கோடி கடன் வாங்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக மின்வாரியம், மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மின்தொடரமைப்பு கழகம் என்ற நிறுவனங்களாக செயல்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் நிதியாண்டு முடிவடைந்ததும், வரவு-செலவு உள்ளடக்கிய நிதிநிலை அறிக்கை வெளியிட வேண்டும். மத்திய மின்சட்டத்தை பின்பற்றி மின்வாரியம் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்து வந்தது. அதை குறித்தக் காலத்தில் வெளியிடாமல் தாமதம் செய்து வந்தது.