ஜெட்டா: 18வது சீசன்ஐபிஎல் தொடர் அடுத்த ஆண்டு மார்ச் 14ம் தேதி முதல் மே 25ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக வீரர்கள் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நேற்று நடந்தது. மொத்தமாக 577 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்றுள்ளனர். முதல் நாளில் 72 வீரர்கள் மொத்தமாக 467 கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டனர்.
முதல் நாள் ஏலத்தில் அதிகபட்சமாக ரிஷப் பன்ட்டை 27 கோடி ரூபாய்க்கு லக்னோ அணி வாங்கியது. ஸ்ரேயாசை ரூ.26 கோடியே 50 லட்சத்திற்கு பஞ்சாப் எடுத்தது. தமிழக வீரர் அஸ்வின் 10 ஆண்டுக்கு பின் சிஎஸ்கே அணிக்கு திரும்பிருக்கிறார்.
இதன் தொடர்ச்சியாக 505 வீரர்களுக்கான ஐபிஎல் ஏலம் இன்று தொடர்கிறது.
The post 2-வது நாள் ஐபிஎல் மெகா ஏலம் தொடங்கியது appeared first on Dinakaran.