பிஜப்பூர்: சட்டீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் புக்டிச்சேரு கிராமத்திற்குள் நேற்று முன்தினம் இரவு அடையாளம் தெரியாத நக்சல்கள் நுழைந்துள்ளனர். அவர்கள் ராஜூ(32) மற்றும் மத்வி முன்னா(27) ஆகிய இருவரையும் கூர்மையான ஆயுதத்தினால் கழுத்தை அறுத்துள்ளனர். இதில் இருவரும் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்த தகவலின்பேரில் அங்கு விரைந்த போலீசார் சடலங்களை மீட்டனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post 2 பேரை வெட்டிக்கொன்ற நக்சல்கள் appeared first on Dinakaran.