2 நாள் பயணமாக சென்னை வந்தார் ரணில் விக்ரமசிங்கே

2 months ago 10


சென்னை:இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே, இந்தியாவிற்கு தனிப்பட்ட முறையில் ஆன்மிக பயணமாக வந்துள்ளார். கர்நாடக மாநிலம் பெல்லாரி அருகே உள்ள வித்யா நகரில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு நேற்று பகல் 12.30 மணிக்கு, சென்னை பழைய விமான நிலையம் வந்தார்.

விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்ட அவர், சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சென்று, அங்கு தங்கியுள்ளார். ரணில், இந்தியாவிற்கு தனிப்பட்ட பயணமாக வந்துள்ளதாக அறிவித்தாலும், அவர் இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் ேதால்வி அடைந்ததால் மன அமைதிக்காக, ஆன்மிகப் பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

The post 2 நாள் பயணமாக சென்னை வந்தார் ரணில் விக்ரமசிங்கே appeared first on Dinakaran.

Read Entire Article