2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; மத போதகர் மீது போக்சோ வழக்கு

5 hours ago 2

கோவை: கோவை ஜிஎன் மில்ஸ் பகுதியை சேர்ந்தவர் ஜான் ஜெபராஜ் (37). காந்திபுரத்தில் உள்ள ஒரு சர்ச்சில் மதபோதகராக இருந்து வருகிறார். கடந்த 11 மாதங்களுக்கு முன்பு அவர் தன் வீட்டில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளார். அந்த நிகழ்ச்சிக்கு காந்திபுரத்தில் வசித்து வரும் அவரது மாமனார் தனது 17 வயது வளர்ப்பு மகளை அழைத்து சென்றிருந்தார். அப்போது, ஜான் ஜெபராஜ் மாமனாரின் வளர்ப்பு மகளையும், தனது வீட்டின் அருகே வசித்து வரும் 14 வயது சிறுமியையும் தனி அறைக்கு சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து வேறு யாரிடமும் கூறக்கூடாது என மிரட்டியதாகவும் தெரிகிறது.

சில நாட்களுக்கு முன்பு ஜான் ஜெபராஜ் வீட்டிற்கு மாமனார் கிளம்பியபோது வளர்ப்பு மகள் உடன் வர தயங்கியுள்ளார். விசாரித்தபோது, கடந்த 11 மாதங்களுக்கு முன்பு தனக்கும், 14 வயது சிறுமிக்கும் ஜான் ஜெபராஜ் பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து கூறியுள்ளார். இது தொடர்பாக காந்திபுரம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் ஜான் ஜெபராஜ் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டது. இதையடுத்து தலைமறைவான பாதிரியாரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

The post 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; மத போதகர் மீது போக்சோ வழக்கு appeared first on Dinakaran.

Read Entire Article