2,400 சிஆர்பிஎப் வீரர்கள் காஷ்மீருக்கு அனுப்பிவைப்பு: இடமாறுதல் உத்தரவு, பயிற்சி நிறுத்தி வைக்க அரசு உத்தரவு

13 hours ago 2

புதுடெல்லி: எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு இடமாற்றத்தை நிறுத்தி வைக்க ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பாதுகாப்பு சூழ்நிலை மோசமடைந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு ஒன்றிய ரிசர்வ் போலீஸ்(சிஆர்பிஎப்) படையில் வீரர்களுக்கு இடமாற்றம் தொடர்பான உத்தரவுகளை நிறுத்தி வைப்பதற்கு சிஆர்பிஎப் தலைமையகம் உத்தரவிட்டுள்ளது. வீரர்களுக்கு பயிற்சி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிஆர்பிஎப் அதிகாரிகள் மற்றும் வீரர்கள் தங்களுடைய பணி இடங்களிலே இருக்க வேண்டும். எந்தவொரு அவசர நிலைக்கும் தயாராக இருக்க வேண்டும் என வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எல்லை பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு சிஆர்பிஎப்பின் 2,400 வீரர்கள் தற்போது காஷ்மீருக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கைகள் தொடரும் வாய்ப்புகள் உள்ளதால் அதிகபட்ச படை துருப்புகளின் தேவையை கருத்தில் கொண்டு சிஆர்பிஎப்,எல்லை பாதுகாப்பு படை(பிஎஸ்எப்),சிஐஎஸ்எப், ஐடிபிபி உள்ளிட்ட துணை ராணுவ வீரர்களின் விடுமுறைகளை ரத்து செய்து உள்துறை அமைச்சகம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது.

The post 2,400 சிஆர்பிஎப் வீரர்கள் காஷ்மீருக்கு அனுப்பிவைப்பு: இடமாறுதல் உத்தரவு, பயிற்சி நிறுத்தி வைக்க அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article