கோவையில் 17 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவையைச் சேர்ந்த தம்பதியின் 17 வயது மகள், பிளஸ்-2 வரை படித்துள்ளார். குடும்பச் சூழல் காரணமாக படிப்பை நிறுத்திய அச்சிறுமி, பாட்டி வீட்டில் தங்கியிருந்தார். கடந்த 16-ம் தேதி இரவு அச்சிறுமி காணாமல்போய்விட்டார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், உக்கடம் போலீஸில் அவரது பாட்டி புகார் அளித்தார். இதற்கிடையில், அடுத்த நாள் அச்சிறுமி வீட்டுக்கு வந்தார்.