17 மாதமாக வாடகை தராததால் சார் பதிவாளர் அலுவலகத்தை பூட்டிய உரிமையாளர் - கழுகுமலையில் பரபரப்பு

1 week ago 4

கோவில்பட்டி: கழுகுமலையில் 17 மாதங்களாக வாடகை தராததால் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு கட்டிட உரிமையாளர் பூட்டு போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை மேலகேட் பகுதியில் சார் பதிவாளர் அலுவலகம் சொந்த கட்டிடத்தில் இயங்கி வந்தது. இந்த கட்டிடம் மிகவும் பழமையானது என்பதால், அதனை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டும் பணி கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபரில் தொடங்கியது. இதனால், சார் பதிவாளர் சங்கரன்கோவில் சாலையில் உள்ள கந்தசாமி என்பவரின் கட்டிடத்துக்கு மாற்றப்பட்டு, கடந்த 12.09.2023 முதல் இயங்கி வருகிறது.

Read Entire Article