தேன்கனிக்கோட்டை, ஜன.22: தேன்கனிக்கோட்டை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 16வயது சிறுமி, கடந்த 19ம் தேதி மதியம் வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. இதையடுத்து அவரது தந்தை தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அந்த புகாரில் தேன்கனிக்கோட்டை தேர்ப்பேட்டையை சேர்ந்த சாதிக் (22) என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post 16 வயது சிறுமி மாயம்; வாலிபர் மீது புகார் appeared first on Dinakaran.