தமிழ்நாட்டில் காவல்துறையில் பணியாற்றும் காவலர்களுக்கான ஒதுக்கீடு மூலம் பணியில் சேர்ந்த காவல் ஆய்வாளர்கள் 15 ஆண்டுகளாக பதவி உயர்வு இல்லாமல் காத்திருக்கின்றனர்.
சீருடை பணியாளர் வாரியம் மூலம் 1998-ம் ஆண்டு காவல் துறையில் உதவி ஆய்வாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் 5 ஆண்டுகள் காவல் துறையில் பணி முடித்தவர்களுக்கு 20 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்படும். அந்த ஒதுக்கீட்டில் 148 பேர் சப்-இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்தனர்.