அரூர், பிப்.13: தர்மபுரி மாவட்டம், அரூர் கச்சேரிமேட்டில் உள்ள தர்மபுரி வேளாண் விற்பனைக்குழுவின் கீழ் செயல்படும் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில், நேற்று பருத்தி ஏலம் நடந்தது. இதில் அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்தனர். நேற்று நடைபெற்ற ஏலத்தில் 33 விவசாயிகள் 139 மூட்டை பருத்தியை கொண்டு வந்தனர். இதில் ஆர்சிஎச் ரக பருத்தி குவிண்டால் ₹7,196 முதல் ₹7,750 வரையும், டிசிஎச் ரகம் ₹9,246 முதல் ₹9,586 வரையும் விற்பனையானது. நேற்று மொத்தம் ₹3.66 லட்சத்திற்கு பருத்தி ஏலம் போனது.
The post 139 மூட்டை பருத்தி ₹3.66 லட்சத்திற்கு ஏலம் appeared first on Dinakaran.