125 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு வாலிபர் கைது

3 months ago 13

நாமகிரிப்பேட்டை, அக்.29: நாமகிரிப்பேட்டை அடுத்த மெட்டாலா அருகே, விவசாய நிலத்தில் சாராய ஊறல் போட்டுள்ளதாக நாமக்கல் மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், நேற்று நாமக்கல் மதுவிலக்கு போலீசார் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மெட்டாலா அருகே குரங்காத்துபள்ளம் பகுதியில், சேலத்தை சேர்ந்த தங்கராசு(28) என்பவர், சாராய ஊறல் போட்டது தெரியவந்தது. சாராயம் காய்ச்சுவதற்காக போட்டிருந்த 125 லிட்டர் சாராய ஊறல் மற்றும் 1 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து போலீசார் அழித்தனர். தொடர்ந்து, விவசாய கூலி தொழிலாளியான தங்கராசுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post 125 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு வாலிபர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article