117-வது தேவர் ஜெயந்தி விழா: ஆளுநர், அரசியல் தலைவர்கள் மரியாதை

6 months ago 24

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 117-வது ஜெயந்தி விழா மற்றும் 62-வது குருபூஜை விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி, சென்னை நந்தனத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஆளுநர் ஆர்.என்.ரவி, கிண்டி ஆளுநர் மாளிகையில், முத்துராமலிங்கத் தேவர் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன், ரகுபதி, எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தமிழச்சி தங்கப்பாண்டியன், மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்டோர் நந்தனம் தேவர் சிலைக்கு மாலை அணிவித்தும், சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த படத்துக்கு மலர்தூவியும் மரியாதை செலுத்தினர்.

Read Entire Article