11-ம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்றவர் கைது

4 months ago 17

நாகர்கோவில்: 11-ம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்ற கல்லூரி மாணவரை உத்தரப் பிரதேசத்தில் போலீஸ் கைது செய்தது. 11-ம் வகுப்பு மாணவியை காணவில்லை என்று கடந்த மாதம் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மாணவியை கடத்திச் சென்றதாக கல்லூரி மாணவர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் தேடி வந்தனர். விசாரணையில் இறச்சக்குளத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவருக்கும் மாணவிக்கும் இன்ஸ்டா மூலம் பழக்கம் தெரியவந்தது. மாணவி மற்றும் கல்லூரி மாணவர் உத்தரப் பிரதேசத்தில் இருப்பதை அறிந்து நாகர்கோவில் போலீஸ் அங்குச் சென்றது. உ.பி-யில் ஒரு வீட்டில் அடைக்கப்பட்டிருந்த மாணவியை மீட்டு, மாணவரையும் போலீஸ் நாகர்கோவில் அழைத்து வந்தது. தொடர்ந்து சம்மந்தப்பட்ட மாணவரை சிறார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சீர்திருத்த பள்ளியில் அடைத்தது.

The post 11-ம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்றவர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article