11 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

7 months ago 29

சென்னை,

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் சூழலில், பரவலாக மழை இன்னும் தீவிரம் அடையவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்பு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி மழையை கொடுக்கவில்லை என்றாலும், தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதை பார்க்க முடிகிறது. அதிலும் தென், மேற்கு, டெல்டா, வட கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தின் 11 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கடலூர் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம், விழுப்புரம், தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article