
புதுடெல்லி,
கடந்த 11 ஆண்டுகளில் ஒருமுறை கூட பிரதமர் மோடி செய்தியாளர் சந்திப்பை நடத்தவில்லை என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
"உலகில் உள்ள ஒவ்வொரு அரசாங்கத்தின் தலைவரும் அவ்வப்போது சுதந்திரமாக செய்தியாளர் சந்திப்புகளை நடத்துகிறார்கள். ஆனால் 11 ஆண்டுகளாக நமது நாட்டின் பிரதமர் எந்த செய்தியாளர் சந்திப்பையும் நடத்தவில்லை.
கடந்த ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் மோடி தனது ஊடக உரையாடல்களை அவரே தயாரித்து, இயக்கி, எழுதியிருந்தார். அதில் ஒன்றில் அவர் தனது பிறப்பு உயிரியல் சார்ந்தது அல்ல என்று கூறினார். ஆனால் ஒருபோதும் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துவதற்கான துணிச்சல் அவருக்கு வரவில்லை.
இது அவருக்கு முன்பு இருந்த பிரதமர்களோடு முற்றிலும் மாறுபட்ட வழக்கமாக உள்ளது. அவருக்கு முன்பு இருந்த பிரதமர், 2 மாதங்களுக்கு ஒருமுறை தன்னிச்சையான பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்தினார். அங்கு அவரிடம் இரக்கமின்றி கேள்விகள் கேட்கப்படும். அனைத்திற்கும் அவர் பொறுமையாக பதிலளிப்பார். நமது ஜனநாயகத்தின் அடித்தளங்கள் இவ்வாறுதான் நிறுவப்பட்டது."
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.