100 நாள் வேலைகேட்டு கிராம மக்கள் கலெக்டரிடம் மனு

5 months ago 14

 

கரூர், நவ. 26: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில், கரூர் மாவட்டம் கே. பிச்சம்பட்டி, கே.பி தாளப்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் மூலம் 100 நாள் வேலை எங்கள் பகுதியில் சரியாக வழங்கப்படுவது இல்லை. இதனால், அனைவரும் சிரமப்படுகிறோம். எனவே, எங்களின் நலன் கருதி 100 நாள் வேலை சீரான முறையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

The post 100 நாள் வேலைகேட்டு கிராம மக்கள் கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.

Read Entire Article