
கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி அங்குள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் அந்த சிறுமி தனது வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிங்காரப்பேட்டை அம்பேத்கர் நகரை சேர்ந்த சரவீன் (20 வயது) என்பவர் சிறுமியை அழைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி அழுது கொண்டே வீட்டுக்கு ஓடி சென்றார். பின்னர் இந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் சிங்காரப்பேட்டை போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் சரவீனை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.