10-ம் வகுப்பு தேர்ச்சி அவசியமில்லை: இளஞ்சிவப்பு ஆட்டோ திட்டத்தில் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

3 months ago 19

சென்னை: சென்னையில் வசிக்கும் பெண்களுக்கான இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் டிச.10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற தகுதியும் நீக்கப்பட்டுள்ளது.

பெண்களின் பாதுகாப்பில் புதிய முன்னெடுப்பாக ‘இளஞ்சிவப்பு ஆட்டோக்களை’ தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. அதன்படி, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக பயணிக்க ஏதுவாக சென்னை மாநகரில் பெண் ஓட்டுநர்கள் மூலம் 250 ஆட்டோக்கள் இயக்கப்பட உள்ளன. இத்திட்டத்தின்கீழ் ஆட்டோ வாங்குவதற்காக 250 பெண்களுக்கு தலா ரூ.1 லட்சம் மானியமாக வழங்கப்படும்.

Read Entire Article