10 ஆண்டுகளுக்கு மேலாக பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்

6 months ago 21

 

குத்தாலம், நவ. 17: மயிலாடுதுறை மாவட்டம்,குத்தாலம் ஒன்றியம் கோமல் ஊராட்சி செம்பியன்கோமல் முதல் உக்கடை வரை இடையேயான சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு தார்சாலையானது கடந்த 10 ஆண்டுகளாக பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து மிகுந்த அளவில் சேதமடைந்து குண்டும் குழியுமாக சாலையானது காட்சியளிக்கிறது. மேலும் சாலையில் தாழ்வான பல பள்ளம் மேடுகளும் காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளுக்கு இந்த சாலை பயணமானது மிகுந்த அளவில் சிரமத்தை ஏற்படுத்துகிறது.

சாலையில் அரிமானம் ஏற்பட்டு உள்ளதால் இரவு நேரங்களில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. பொரும்பூர்,கொண்டங்கி, கங்காதரபுரம், பில்லூர், ஏ.கிளியனூர், நிம்மேலி உள்ளிட்ட கிராம மக்கள் மற்றும் மாணவ-மாணவிகளுக்கு கல்லூரிகளுக்கு செல்லவும் விவசாயிகள் தங்களுக்கான பணிகளை மேற்கொள்ளவும், இந்த சாலை பிரதான சாலையாக உள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குண்டும் குழியுமாக உள்ள சாலையை புதிதாக அமைத்து தர இந்த பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்த சாலையில் மின்கம்பம் மற்றும் மின் விளக்குகள் இல்லை என்பதும், இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இரவு நேர பயணம் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

The post 10 ஆண்டுகளுக்கு மேலாக பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Read Entire Article