1,300 யோகா பயிற்றுநர்கள் நியமிக்க உத்தரவு

22 hours ago 4

சென்னை: அரசு மருத்துவமனைகளில் 1,300 யோகா பயிற்றுநர்கள் நியமிக்க வேண்டும் என்று இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குநர் விஜயலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.

யோகா பயிற்சி உடலுக்கும் மனதுக்கும் பல்வேறு நன்மைகளை தருகிறது. குறிப்பாக, உடல் வலிமை, ஆற்றல் அளவு, மன அமைதி மேம்படுகிறது. தினமும் யோகா பயிற்சி செய்வதால், பல்வேறு நோய்களுக்கு தீர்வாக இருப்பதுடன், புத்துயிர் பெறவும் உதவுகிறது. அனைத்து தரப்பு மக்களும் யோகா பயிற்சியை மேற்கொள்ளும் வகையில், அரசு மருத்துவமனைகள் மற்றும் அனைத்து ஆயுஷ் தேசிய நல்வாழ்வு மையங்களில், 650 இருபாலர் யோகா பயிற்றுநர்கள் மற்றும் 650 பெண் யோகா பயிற்றுநர்கள் என 1,300 பேரை நியமிக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் இந்திய மருத்துவ மற்றும் ஓமியோபதி துறை இயக்குநர் விஜயலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.

Read Entire Article