1.14 கோடி பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

6 hours ago 1

சென்னை: மகளிர் உரிமைத்தொகையில் பெயர் விடுபட்டவர்கள் ஜூன் முதல் விண்ணப்பிக்கலாம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பெயர் விடுபட்டவர்கள் ஜூன் மாதம் முதல் விண்ணப்பிக்கலாம் என்று சட்ட சபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். விடுபட்டவர்கள் விண்ணப்பித்தால் அவர்களுக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

மேலும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியதாவது; மகளிர் உரிமைத்தொகைக்காக 4-ஆம் கட்டமாக 9,000 இடங்களில் முகாம் நடைபெற உள்ளது. தகுதியான அனைவருக்கும் உரிமை தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 1.14 கோடி பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுகிறது” என்றார்.

 

The post 1.14 கோடி பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Read Entire Article