ஆளும் கட்சியாக இருந்தாலும் அடிமட்ட திமுக-வினருக்கு ஆயிரம் மனக்குறைகள் இருக்கின்றன. அதையெல்லாம் கேட்டுத் தெரிந்து கொள்வதற்காக ‘உடன்பிறப்பே வா’ என்ற தலைப்பில் கட்சி நிர்வாகிகளை சட்டமன்ற தொகுதி வாரியாக சந்தித்து வருகிறார் திமுக தலைவர் ஸ்டாலின். ஆனால், இந்தச் சந்திப்புகளில் ஆர்வமாக பங்கெடுக்கும் உடன்பிறப்புகள், தங்களது மனக்குமுறலை கொட்டி ஆறுதல் தேட முடியாமல் பேருக்கு வந்து போய்கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.
இதற்கு முன்பும் இதுபோன்ற சந்திப்புகளை நடத்தி இருக்கிறார் ஸ்டாலின். அப்போதெல்லாம், மாவட்டச் செயலாளர்கள், உள்ளிட்டோர் மீது கீழ்மட்ட நிர்வாகிகள் ஏராளமான குற்றச்சாட்டுகளைக் கொட்டி இருக்கிறார்கள். அதற்கெல்லாம் எந்த விடியலும் ஏற்படவில்லை. மாறாக, சில இடங்களில் குறைகளைச் சொன்னவர்களே குற்றவாளிகளாக சித்தரிக்கப்பட்டார்கள்.