ஸ்டான்லி மருத்துவமனையில் மனநல மருத்துவரை தாக்கியவர் கைது

2 months ago 12

தண்டையார்பேட்டை, நவ.15: வில்லிவாக்கம் சிட்கோ நகரைச் சேர்ந்தவர் ஹரிஹரன் (49). இவர், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மனநல மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை மேற்கொண்டபோது மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு வாலிபர் சிகிச்சைக்காக வந்தார். அப்போது சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த ஹரிஹரனை கன்னத்தில் அறைந்துவிட்டு வாலிபர் அங்கிருந்து தப்பிவிட்டார். இதுகுறித்து வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து நீலாங்கரையில் பதுங்கி இருந்த மனநலம் பாதித்த வாலிபரை நேற்று கைது செய்து ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post ஸ்டான்லி மருத்துவமனையில் மனநல மருத்துவரை தாக்கியவர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article