ஸ்டான்லி அரசு மருத்துவமனை, தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

4 months ago 13

சென்னை: சென்னையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனை மற்றும் மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. கல்வி நிலையங்கள், வணிக நிறுவனங்கள், விமானம், ரயில், பேருந்து நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள், திரையரங்குகள் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு புரளியை கிளப்பும் வகையில் அவ்வப்போது வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. வெளிநாட்டில் இருந்தவாறு மர்ம நபர்கள் இ-மெயில்கள் மூலம் இவ்வாறு மிரட்டி வருகின்றனர்.

அதன்படி, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கும் நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. தகவல் அறிந்து ராயபுரம் காவல் நிலைய போலீஸார் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் மருத்துவனை முழுவதும் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை நடத்தினர். முடிவில் சந்தேகத்துக்கிடமான எந்த பொருட்களும் சிக்கவில்லை. இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் புரளியை கிளப்பும் வகையில் விடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

Read Entire Article