ஷேன் வார்னே போல திறமை கொண்ட அவருக்கு இங்கிலாந்தில் வாய்ப்பு கொடுங்கள் - பரத் அருண்

2 hours ago 3

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி இந்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 20-ந் தேதி லீட்சில் தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு விட்டது. அகர்கர் தலைமையிலான தேர்வு குழுவினர் அணியை தேர்வு செய்து அறிவித்தனர்.

டெஸ்ட் போட்டியில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெற்றதால் அடுத்த கேப்டன் யார்? என்று அதிக எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில் சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இம்முறை ரோகித் சர்மா, விராட் கோலி, அஸ்வின் உள்ளிட்ட பெரும்பாலான சீனியர் வீரர்கள் ஓய்வு பெற்று விட்டதால் நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த தொடரில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஷேன் வார்னே போல குல்தீப் யாதவ் சிறப்பாக பவுலிங் செய்து இங்கிலாந்துக்கு சவாலைக் கொடுப்பார் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான பரத் அருண் கூறியுள்ளார். எனவே அவருக்கு வாய்ப்பு கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளும் பரத் அருண் இது குறித்து பேசியது பின்வருமாறு:-

"இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் மணிக்கட்டு ஸ்பின்னர்கள் எப்போதும் சிறப்பாக செயல்பட்டு வந்துள்ளனர். பிட்ச்சில் ஆரம்பத்தில் கொஞ்சம் ஈரப்பதம் இருக்கும்போது மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர்களுக்கு உதவி கிடைக்கும். மேலும், அவர்கள் உருவாக்கும் கரடுமுரடான பந்துவீச்சும் ஒரு தனி கலை. இவை அனைத்தும் வெறும் பவுலிங் பற்றியது மட்டும் கிடையாது

இதைப் பற்றி நினைக்கும்போது உடனடியாக நம் நினைவுக்கு வருபவர் ஷேன் வார்னே என்று நான் நினைக்கிறேன். அவரைப் போலவே குல்தீப் யாதவிடம் இங்கிலாந்தில் வெற்றிகரமாக செயல்படுவதற்கு தேவையான திறன்களைக் கொண்டுள்ளார். எனவே அவருக்கு வாய்ப்பு கொடுங்கள்" என்று கூறினார்.

Read Entire Article