வொர்க் ஃப்ரம் ஹோம் மோடிலேயே கட்சி நடத்துகிறார் என விஜய்யை அவரைப் பிடிக்காதவர்கள் கிண்டலடித்த நிலையில், அந்த அவச்சொல்லை போக்குவதற்காக களத்துக்கு வந்து மக்கள் பிரச்சினைகளை கையிலெடுத்து போராட ஆரம்பித்துவிட்டார்கள் தவெக தொண்டர்கள்.
சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்குவதால் அதிமுக-வும் பாஜக-வும் போட்டி போட்டுக் கொண்டு திமுக அரசுக்கு எதிரான பிரச்சினைகளை கையிலெடுத்து வாள் சுழற்றி வருகின்றன. இந்தச் சூழலில், “அடுத்த 60 வாரங்களுக்கு விஜய் தான் எதிர்க்கட்சி தலைவராக இருக்கப் போகிறார். அவர் மக்களோடு மக்களாக களத்துக்கு வரப் போகிறார்” என்றெல்லாம் தவெக தரப்பில் எதிர்பார்ப்புகளை எகிறவைத்து வருகிறார்கள். அதற்கு முன்னோட்டமாக அதிமுக, பாஜக-வுக்கு போட்டியாக தவெக-வினரும் மக்கள் பிரச்சினைகளுக்காக களத்துக்கு வந்திருக்கிறார்கள்.