வைகாசி மாத சிறப்புகள்

3 hours ago 2

* வைகாசி மாத பெளர்ணமி நாள்தான் புத்தர் அவதரித்த, போதி மரத்தடியில் ஞானம் கிடைத்த, முக்தி கிடைத்த நிகழ்வுகள் நடந்தன.

* உத்தரகோசமங்கை தலத்தில் வைகாசி விசாகத்தன்று அக்னி தீர்த்தத்தில் நீராடி அங்கு கோயில் கொண்ட மங்களநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் தோஷங்கள் நீங்கும் என்று கூறுகிறது அக்னி புராணம்.

* திருத்தணி முருகன் கோயிலில் வைகாசி விசாகத்தன்று பிரசாதமாக வழங்கப்படும் விபூதி, சந்தனம் சர்வ ரோக நிவாரணியாகும்.

* திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோவிலில் தரப்படும் பன்னீர் இலை விபூதியும் நோய் தீர்க்கும் குணம் கொண்டதாகும். மகான் ஆதிசங்கரரின் வயிற்று வலியைப் போக்கியது இந்த விபூதிதான்.

* சிவகங்கை மாவட்டம், சிறு கூடல் பட்டியில் உள்ள மலையாசியம்மன் கோயிலில் வைகாசி பெளர்ணமியன்று திருவிழா நடை பெறுகிறது. அப்போது புது மண் பானையில் பானகம் செய்து படைத்து மூன்று நாட்கள் திருவிழா கொண்டாடப்படுகிறது.

* நவ திருப்பதிகளில் ஒன்றான ஆழ்வார் திருநகர் ஆதிநாதர் கோயிலில் வைகாசி விசாகத்தன்று நடைபெறும் கருட சேவையின் போது நவதிருப்பதி பெருமாளை தரிசனம் செய்யலாம்.

– ஆர்.பத்மப்ரியா, திருச்சி.

The post வைகாசி மாத சிறப்புகள் appeared first on Dinakaran.

Read Entire Article