மதுரை: வேடசந்தூரில் தனியார் மினரல் வாட்டர் நிறுவனங்களுக்கு ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்தது. சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுத்து விற்றதாக தடை கோரிய வழக்கில் ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. வேடசந்தூரில் உரிய அனுமதி இன்றி நிலத்தடி நீரை எடுத்து விற்றதாக குடிநீர் நிறுவனங்கள் மீது புகார் அளித்தன. மனு தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பதில்மனு தாக்கல் செய்யவும் ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. வேடசந்தூரைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனுத் தாக்கல் செய்திருந்தார்.
The post வேடசந்தூரில் தனியார் மினரல் வாட்டர் நிறுவனங்களுக்கு இடைக்கால தடை விதித்தது ஐகோர்ட் கிளை appeared first on Dinakaran.