வேங்கைவயல் விவகாரம்: நீதி விசாரணை ஆணையம் அமைக்க முதல்வரிடம் திருமாவளவன் கோரிக்கை

10 hours ago 3

சென்னை: வேங்கைவயல் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு நீதி விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினிடம் திருமாவளவன் நேரில் வலியுறுத்தினார்.

முதல்வர் ஸ்டாலினை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இன்று சந்தித்துப் பேசினார். அப்போது, 4 கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றையும் முதல்வரிடம் வழங்கினார். அந்த மனுவில், "எனது வேண்டுகோளையேற்று தாய்த்தமிழ்க் காத்தப் போராளிகள் நடராசன்- தாளமுத்து ஆகியோருக்கு சிலை நிறுவப்படும் என அறிவிப்புச் செய்துள்ள தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி. அத்துடன், கடந்த நான்கு ஆண்டுகளாகப் பட்டியல் சமூக மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக புரட்சியாளர் அம்பேத்கர், பண்டிதர் அயோத்திதாசர் பெயரிலான திட்டங்கள் உட்பட தாங்கள் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை. அதற்காக எனது மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.

Read Entire Article