டேராடூன்: உத்தராகண்டில் வெளிமாநிலத்தவர்கள் விவசாய நிலங்களை வாங்க தடைவிதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநில உரிமை, வளத்தை பாதுகாக்கும் வகையில் சட்டம் இயற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் சட்டமன்றக் கூட்டத் தொடரில் மசோதா தாக்கல் செய்யப்படும் என கூறப்படுகிறது. ஹரித்வார், உத்தம் சிங் தவிர 11 மாவட்டங்களில் விவசாய நிலங்களை வாங்க தடை விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
The post வெளிமாநிலத்தவர் விவசாய நிலங்களை வாங்க தடை appeared first on Dinakaran.