வெல்டரை தாக்கியவர் கைது

6 hours ago 3

திருவெறும்பூர், ஜூன் 23: திருவெறும்பூர் அருகே வெல்டரைத் தாக்கிய வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் ரவுடி மற்றும் அவரது சகோதரரை போலீசார் தேடி வருகின்றனர். திருவெறும்பூர் அருகே துவாக்குடி வடக்குமலை கருமாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ரங்கராஜ். இவரது மகன் ஹரிஹரன் (25). வெல்டர். இவர் அப்பகுதியில் ஒரு துக்க வீட்டில் இருந்தபோது, அங்கு வந்த துவாக்குடி வடக்குமலை இமானுவேல் நகரைச் சேர்ந்த ரவுடி ரமேஷ் ஏன் வேலைக்கு வரவில்லை எனக்கேட்டு அவரது சகோதரர்கள் பிரகாஷ், பிரவீன் ஆகியோர் தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியும், அரிவாளைக் காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த ஹரிஹரன் கொடுத்த புகாரின் பேரில் துவாக்குடி சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்கு பதிந்து பிரகாஷை கைது செய்து விசாரித்து வருகிறார். மேலும் தலைமறைவான ரவுடி ரமேஷ் மற்றும் பிரவீனை தேடி வருகிறார்.

The post வெல்டரை தாக்கியவர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article