“வெற்றுத் தகவல்கள் வெள்ளை அறிக்கையா?” - அமைச்சர் டிஆர்பி ராஜாவுக்கு எம்.சி.சம்பத் கேள்வி

2 hours ago 4

சென்னை: “வெள்ளை காகிதத்தில் உண்மைத் தன்மை இல்லாமல், மக்களை ஏமாற்றும் விதமாக அமைச்சர் ராஜா வெளியிட்ட கடிதத்தை, இதுதான் வெள்ளை அறிக்கை என்று சொல்லும் ஒரு முதல்வரைப் பெற்றிருக்கிறோம். தொழில் துறை அமைச்சர் விதண்டாவாதமான பேச்சைப் பேசாமல், திமுக அரசு ஈர்த்த தொழில் முதலீடுகள் பற்றிய ஒரு விரிவான வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்.” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குடும்பத்தோடு சுற்றுலா சென்று பல ஆயிரம் கோடி ரூபாய் கணக்கில் முதலீடுகளை ஈர்த்தேன் என்றும், அதிமுக ஆட்சிக் காலத்தில் பெறப்பட்ட அந்நிய முதலீடுகளில் 10 சதவீதம் கூட நிறைவேற்றப்படவில்லை என்றும், முதல்வர் மு.க. ஸ்டாலின் மனம்போன போக்கில் உளறியதற்கு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆதாரங்களுடன் பதில் அளித்துள்ளார். மேலும் அந்த அறிக்கையில், 40 மாதகால திமுக ஆட்சியில் நான்கு முறை வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின் போட்ட ஒப்பந்தங்களின் நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா என்று சவால் விட்டார்.

Read Entire Article