சென்னை: சிறப்பு திட்ட செயலாக்கத் துறை கண்காணிப்பு அதிகாரிகள் அரசியல் தலையீடு இல்லாமல் பணியாற்றும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பாஜக வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் இன்று (செப்.25) வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசின் ஏழை மக்களுக்கான வீடு கட்டும் திட்டம், அனைத்து வீடுகளுக்கும் சுகாதாரமான குடிநீர் வழங்கும் திட்டம், இலவச கியாஸ் திட்டம், மகளிர், குழந்தைகளுக்கான திட்டங்கள், மருத்துவத் திட்டங்கள், முத்ரா வங்கி கடன் திட்டம், செல்வமகள் சேமிப்புத் திட்டம் உள்ளிட்ட ஏராளமான மத்திய அரசு திட்டங்கள் தமிழகத்தில் அடித்தட்டு மக்களைச் சென்றடையவில்லை.