60 நாட்களுக்குப் பிறகு மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடிக்கு கீழ் சரிவு

2 hours ago 5

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம் 60 நாட்களுக்குப் பிறகு 100 அடிக்கு கீழ் இன்று (செப்.25) சரிந்தது. டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு 15,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை காவிரி டெல்டா பாசனத்துக்கான முக்கிய நீர்த்தேக்கப் பகுதியாக விளங்கி வருகிறது. டெல்டா மாவட்டங்களில் 16 லட்சம் ஹெக்டேர் நிலம் மேட்டூர் அணையால் பாசன வசதி பெற்று வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கப்படும். அதன்படி, அணையில் போதிய அளவு நீர் இல்லாததால், கடந்த ஜூன் 12-ம் தேதி டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கப்படவில்லை. அப்போது, அணையின் நீர்மட்டம் 43.52 அடியாகவும், நீர் இருப்பு 13.97 டிஎம்சியாகவும், நீர்வரத்து 404 கன அடியாகவும், குடிநீர் தேவைக்காக 1,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.

Read Entire Article