வெற்றிகர​மான, மகிழ்ச்சியான மனிதராக உருவாக நற்சிந்தனை அவசி​ய​ம்: தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி வலியுறுத்தல் @ ‘நற்சிந்தனை நன்னடை’ நிகழ்வு

3 months ago 9

தருமபுரி: வாக்கரூ - ‘இந்து தமிழ் திசை' நாளிதழ் சார்பில் தருமபுரியில் நேற்று நடைபெற்ற ‘நற்​சிந்தனை நன்னடை’ நிகழ்வில், வெற்றிகர​மான, மகிழ்ச்​சியான மனிதராக உருவாக நற்சிந்தனை அவசி​ய​ம் என்று மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி கூறினார்.

பள்​ளிப் பருவத்​திலேயே சமுதா​யத்​துக்குப் பயனளிக்​கும் நற்செயல்​களைச் செய்​து​வரும் மாணவர்​களைப் பாராட்டி ஊக்கு​விக்​கும் வகையில் வாக்கரூ - ‘இந்து தமிழ் திசை’ இணைந்து ‘நற்​சிந்தனை நன்னடை’ எனும் நிகழ்வை நடத்தி வருகிறது. கோவை, திருச்சி, சென்னை மண்டலங்​களில் நற்செயல்​களில் ஈடுபட்ட மாணவ, மாணவி​களைப் பாராட்டும் நிகழ்வு தருமபுரி ரோட்டரி அரங்​கில் நேற்று நடைபெற்​றது. தருமபுரி ஆட்சியர் கி.சாந்தி, மாணவ, மாணவி​களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்​றிதழ்களை வழங்​கினார். மேலும், பள்ளிகளுக்கு பாராட்டு கேடயங்களை வழங்கி அவர் பேசியதாவது: நற்சிந்தனை கொண்ட மாணவ, மாணவி​களைக் கண்டறிந்து, அவர்களை ஊக்கு​விக்​கும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழும், வாக்கரூ நிறு​வன​மும் இணைந்து நடத்​தும் இந்நிகழ்ச்சி வரவேற்​புக்​குரியது. மொத்தம் 19 மாவட்​டங்​களில் உள்ள அரசு, அரசு உதவி​பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் என 27 பள்ளி​களைச் சேர்ந்த 88 மாணவ, மாணவி​களுக்கு விருது வழங்​கு​வதைப் பாராட்டு​கிறேன்.

Read Entire Article